Saturday 4th of May 2024 07:01:49 PM GMT

LANGUAGE - TAMIL
.
கனடாவுக்கு முன்னுரிமை அடிப்படையில் 20 மில்லியன் கோவிட்19 தடுப்பூசிகள்!

கனடாவுக்கு முன்னுரிமை அடிப்படையில் 20 மில்லியன் கோவிட்19 தடுப்பூசிகள்!


கனடா முன்பதிவு செய்துள்ள கோவிட்-19 தடுப்பூசியின் 20 மில்லியன் சொட்டுக்கள் முன்னுரிமை அடிப்படையில் அந்நாட்டுக்கு வழங்கப்படும் என அமெரிக்காவின் மருந்து தயாரிப்பு நிறுவனமான மொடர்னாவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மொடர்னா தடுப்பூசி 95 வீதம் பாதுகாப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தத் தடுப்பூசிக்காக அங்கீகாரம் கோரி அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுச் சபையிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

அனேகமாக கிறிஸ்மஸுக்கு முன்பு இந்தத் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரக்கூடும் என நம்பப்படுகிறது.

இந்நிலையிலேயே இந்தத் தடுப்பூசியை விரைவில் கனடா பெற்றுக்கொள்ளும் என மொடர்னாவின் தலைவர் கூறினார்.

மொடர்னா தடுப்பூசியின் 20 மில்லியன் சொட்டுக்களைக் பெறும் ஒப்பந்தத்தில் கனடா கையெடுத்திட்டு்ள்ளது. அதேவேளை, இந்தத் தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும் பட்சத்தில் மேலும் மில்லியன் கணக்கான தடுப்பூசிகளைப் பெற கனடா விருப்பம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE